பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் தென்காசி மாவட்ட அளவில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றது.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 94 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவி ஆர்.வந்தனா 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடமும், தென்காசி மாவட்ட அளவில் சிறப்பிடமும் பெற்றார். இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:தமிழ்-98, ஆங்கிலம்-97, இயற்பியல்-100, வேதியியல்-100, கணினி அறிவியல்-99, கணிதம்-97.
இப்பள்ளி மாணவர் ஜி.விமல் 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு: தமிழ்-98, ஆங்கிலம்-93, இயற்பியல்-99, வேதியியல்-100, உயிரியல்-100, கணிதம்-99. இப்பள்ளியில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 12 மாணவ. மாணவிகளும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 38 மாணவ, மாணவிகளும் பெற்றுள்ளனர்.
மேலும் இயற்பியலில் 2 பேரும், வேதியியலில் 4 பேரும், உயிரியலில் 3 பேரும், கணினி அறிவியலில் ஒருவரும், கணக்கியலில் 2 பேரும், வணிகவியலில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பிளஸ் 2 தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் முதல் மதிப்பெண்ணாக 600க்கு 591 மதிப்பெண்கள் பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை படைத்த மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) இராமசுப்பு, ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.