News

News

தென்காசி குறுவட்ட கைப்பந்து போட்டிகள் : ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

தென்காசி குறுவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். தென்காசி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் குற்றாலம் ஐந்தருவி செய்யது ரெசிடென்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்காசி குறுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். ஜூனியர் பிரிவு பெண்கள் கைப்பந்து போட்டியில்  குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். சீனியர் பிரிவு பெண்கள் கைப்பந்து போட்டியில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிகள் மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.வெற்றி பெற்ற மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, இசக்கிதுரை, பால்மதி, வெங்கடேஷ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

 

 

ஆக்ஸ்போர்டு பள்ளியில் கார்க்கில் வெற்றி தினம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் கார்க்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் ஆங்கில மன்றம் சார்பில் நடைபெற்ற கார்க்கில் வெற்றி தின விழாவிற்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழுமங்களின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை முன்னிலை வகித்தார். மாணவி சுபிக்ஷா வரவேற்றுப் பேசினார்.  தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் கார்க்கில் போரில் இந்தியயா வெற்றி பெற்றது குறித்து பேசினர். கார்க்கில் வெற்றி குறித்த நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை மாணவ, மாணவிகள் நடத்தினர். கார்க்கில் போர் வெற்றி குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. நிகழ்க்சிகளை மாணவி சக்தி துளசி தொகுத்து வழங்கினார். முடிவில் லெட்சுமி நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் கொண்டாடப்பட்ட முன்னாள்முதல்வர் காமராஜரின் 117வது பிறந்த தின விழாவிற்கு பள்ளி சீனியர் முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளரும் செயலாளருமான அன்பரசி திருமலை முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார். அலங்கரிக்கப்பட்ட காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  மாணவர்கள் காமராஜர் வேடம் அணிந்து அவரின் பல்வேறு சாதனைகளை எடுத்துக் கூறினர். கிங் மேக்கர் காமராஜர், கர்மவீரர் காமராஜர், தென்னாட்டு காந்தி காமராஜர், படிக்காத மேதை காமராஜர், கல்வி கண் திறந்த காமராஜர், மதிய உணவு அளித்த காமராஜர், அணைக்கட்டுகள் தந்த காமராஜர், பெருந்தலைவர் காமராஜர், தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த காமராஜர்; உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடைபெற்றது.  இவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சீனியர் முதல்வர் திருமலை பரிசுகள் வழங்கினார்.காமராஜர் ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்து புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் கண்டு புகைப்படங்களுக்கான விளக்கங்களை கேட்டறிந்தனர். நிகழ்ச்சிகளை மாணவர் அபிஷேக் ஜோயல், மாணவி மதுபாலா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இறுதியில் மாணவி நித்யகல்யாணி நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் உலக உயிரினங்கள் தினம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் உலக உயிரினங்கள் தினம் கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் கொண்டாடப்பட்ட உலக உயிரினங்கள் தின விழாவிற்கு பள்ளி சீனியர் முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். செயலாளர் அன்பரசி திருமலை முன்னிலை வகித்தார். மாணவி அப்ரா வரவேற்று பேசினார்.விலங்குகளால் மனிதர்களுக்கு பரவக்கூடிய நோய்கள் பற்றி மாணவ, மாணவிகள் விளக்கினர். மேலும் மாணவ, மாணவிகள் பல்வேறு விலங்குகள் போன்று மாறு வேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் நடத்தினர்.  பல்வேறு உயிரினங்கள் வாழ்க்கை சூழல் குறித்த கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை திரளான மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர். முடிவில் மாணவர் அச்சுதானந்தன் நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் மருத்துவர் தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் நடைபெற்ற மருத்துவர் தின விழாவிற்கு பள்ளி சீனியர் முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் அன்பரசி திருமலை முன்னிலை வகித்தார்.  மாணவர் ஸ்ரீநந்தா வரவேற்று பேசினார். மாணவி அகல்யா, மாணவர் குருசரன் ஆகியோர் மருத்துவர் பணி குறித்து ஹிந்தியில் உரையாற்றினர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் மற்றும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் எவ்வாறு மருத்துவ சேவை செய்கின்றனர் என்பது குறித்து மாணவர்கள் மைம் மூலம் நடித்துக் காட்டினர்.  மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ சேவை குறித்த கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை திரளான மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர். இறுதியில் மாணவி சஞ்சனி நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் சர்வதேச யோகா தினம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தின விழாவிற்கு பள்ளி சீனியர் முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் ஜெரிக்சன் வரவேற்று பேசினார்.  யோகாவின் சிறப்புகள் மற்றும் பயன்கள் குறித்து ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பேசினர். மாணவ, மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.  யோகா பற்றிய விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. விழாவில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் சஞ்சய்வேல் நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் பெருங்கடல் தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் பெருங்கடல் தின விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை வளர்க்கும் வகையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பெருங்கடல் தின விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி கவுரவ முதல்வர் திருமலை தலைமை தாங்கி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். பள்ளி செயலாளர் அன்பரசி திருமலை முன்னிலை வகித்தார். பள்ளி மாணவி அப்ரா வரவேற்றுப் பேசினார். மாணவி அக்சயா உலக பெருங்கடல் தின உறுதிமொழியை வாசிக்க அதனை மற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவி காவியா உலக பெருங்கடல் என்ற தலைப்பில் பேசினார். மாணவ, மாணவிகள் கடல் உயிரினங்கள் போன்று வேடமணிந்து நடனம் ஆடினர். மேலும் பெருங்கடலின் சிறப்புகளை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெருங்கடலில் வாழும் உயிரினங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர். முடிவில் மாணவி பாவனா நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியில் குடியரசு தினவிழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி சரபினா வரவேற்று பேசினார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுல்தான் பாஷா தேசிய கொடியேற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அஜ்மல் அசோசியேட்ஸ் வழக்கறிஞர் பாலசெந்தில்குமார் குடியரசு தின உரையாற்றினார். மாணவர் வெஸ்லி தாமல் ஜோ, மாணவி நித்ய கல்யாணி ஆகியோர் குடியரசு தினம் என்ற தலைப்பில் பேசினர். மாணவர் ஹரிபிரகாஷ் கவிதை வாசித்தார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியைகளுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. முடிவில் மாணவி லதிபாஇஷானா நன்றி கூறினார். 

< 1 ... 10 11 12 13 14 ... 20 >