News

News

குற்றாலம் சாரல் திருவிழா மாரத்தான் போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

குற்றாலம் சாரல் திருவிழாவில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம்பெற்றனர். குற்றாலம் சாரல்திருவிழாவின் நிறைவு விழா அன்று மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது. ஐந்தருவி முதல் குற்றாலம் வரையிலும், குற்றாலம் கலைவாணர் கலையரங்கம் முதல் காசிமேஜர்புரம் வரையிலும் இரண்டு இடங்களில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இப்போட்டியை பயிற்சிஉதவி ஆட்சியர் சுகபுத்தரா துவக்கி வைத்தார். குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் ஆகியோர் முதலிடம் பெற்றனர். போட்டிகளில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடமும், முக்கூடல் தீபா மெட்ரிக் பள்ளி மாணவர் செல்வவசந்த் இரண்டாமிடமும், இப்பள்ளி மாணவர் கைலாசநாதர் மூன்றாமிடமும் பெற்றனர். பள்ளி மாணவியர்பிரிவில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மணிகாஸ்ரீ முதலிடமும், செந்தட்டியாபுரம் பழனியப்பா பள்ளி மாணவி தவமணி இரண்டாமிடமும் பெற்றனர். கல்லூரி  மாணவியர் பிரிவில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் பிரியா, பேச்சியம்மாள், இந்திரா ஆகியோர் முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது இடமும் பெற்றனர்.  கல்லூரி மாணவர் பிரிவில் இலஞ்சி திருப்பதி அகாடமி மாணவர்கள் சக்திகுமார், பெருமாள்ராஜா, கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது இடம் பெற்றனர். ஆண்கள் பொதுப் பிரிவில் பாளையங்கோட்டை இஸ்ரேல் ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த சேதுராமன், அந்தோணிடார்வின், இலஞ்சி திருப்பதி அகாடமி மாரிச்செல்வம் ஆகியோர் முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது இடமும் பெற்றனர்.  பொது பெண்கள் பிரிவில் இலஞ்சி திருப்பதி அகாடமியைச் சேர்ந்த தனநித்யா, சண்முககனி ஆகியோர் முறையே முதல், இரண்டாமிடமும் பெற்றனர். சிறப்பு பிரிவில் தென்காசி அரசு ஐ.டி.ஐ.மாணவர் அஜீத்குமார் முதலிடமும், செங்கோட்டை பால்ராஜ் இரண்டாமிடமும், சங்கரன்கோவில் முத்துப்பாண்டி மூன்றாமிடமும் பெற்றனர்.போட்டியின் நடுவர்களாக சத்யா, பிரின்ஸ் ஆகியோர் செயல்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இரவில் நடைபெற்ற சாரல் திருவிழாவின் நிறைவு விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, மாவட்டஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் மரவள்ளிக்கிழங்கு தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மரவள்ளிக் கிழங்கு தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கே.ஜி., மாணவ, மாணவிகள் மரவள்ளிக் கிழங்கு பற்றி அறிந்து கொள்ளும் வகையில் மரவள்ளிக் கிழங்கு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கி மரவள்ளிக் கிழங்கின் பயன்கள் பற்றி பேசினார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் மிதுன் வரவேற்றுப் பேசினார். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவர்கள்  லிங்கேஸ் முத்துராம், ராகுல் ஆகியோர் மரவள்ளிக் கிழங்கின் மருத்துவ குணங்கள் மற்றும் ஊட்டச்சத்து பயன் குறித்து பேசினர். மாணவிகள் ஜான்ஸி, தேவி, மினர்வனா ஆகியோர் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி குறித்து பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் மாணவி கவுசிகா நன்றி கூறினார்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய போட்டிகள் : ஆக்ஸ்போர்டு பள்ளி வெற்றி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜூலை மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் இளையோர் பிரிவு 800 மீ ஓட்டத்தில் முதலிடமும், மாணவர் வெங்கடேஷ்குமார் உயரம் தாண்டுதலில் முதலிடமும், தொடர் ஓட்டத்தில் இப்பள்ளி மாணவர்கள் முதலிடமும், இப்பள்ளி மாணவர் முகமது மீரான் 100 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவி சுருதிகா குண்டு எறிதலில் இரண்டாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் உலக மக்கள் தினம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தினம் கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில மன்றம் சார்பாக நடைபெற்ற உலக மக்கள் தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமைதாங்கினார். பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவித் தலைமை ஆசிரியர்  சுப்பம்மாள்,  நிர்வாக அலுவலர்  கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாணவி அஸ்விகா வரவேற்று பேசினார்.   மாணவ, மாணவிகளின் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நாடகம்,  மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்த மௌனமொழி நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவி திவ்யா உலக மக்கள் தொகை பற்றி பேசினார்.நிகழ்ச்சிகளை மாணவர் ராகுல், மாணவி சுபிக்ஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவி  முகமது மீரான் ஷமி நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் பிளாஸ்டிக் தடை தினம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் சர்வதேச பிளாஸ்டிக் தடை தின விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சார்பில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் சர்வதேச பிளாஸ்டிக் தடை தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதன்மை முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் அன்பரசி திருமலை, ஒருங்கிணைப்பாளர் குழந்தை தெரசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி ஆதினி விவேகஸ்ரீ வரவேற்றுப் பேசினார். மாணவர் ஐசக் டேனியல் ஹிந்தியிலும், மாணவர் டொம்னிக்டெரிசன் ஆங்கிலத்திலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி பேசினர். மாணவர் அகன்ஸ்லின் வினாடி, வினா நிகழ்ச்சி நடத்தினார். மாணவர்கள் கபிலன், சக்கரியா, அச்சுதானந்தன், அர்னேஷ், விகாஷ், அப்துல்லா ஆகியோர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கவர்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் பார்த்தனர். பாலிதீன் கவர்கள் பயன்படுத்த மாட்டோம்!, சுற்றுச்சூழலை பாதுகாப்போம்! என மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவி சுபஸ்ரீ நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் உலக தந்தையர் தின விழா

 

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக தந்தையர் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக அப்பா தின விழாற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் அசிம்முஸ்தபா வரவேற்றுப் பேசினார்.தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவர்கள் ஹரிவேல்சுதன், குகனேஷ், முகேஷ்கிருஷ்ணன், மாணவிகள் அப்ரின் மீராள், செல்வதரணி, அசுனாநர்ககீஸ், முத்துலாவன்யா, மகாலெட்சுமி, சுபிஷா ஆகியோர் தந்தையர் சிறப்பு பற்றியும், உலக தந்தையர் தினம் பற்றியும் பேசினர்.மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மாணவர் அருண்மகேஷ் மாணவி சௌமியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவி மகாலெட்சுமி நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் கொய்யாப்பழ தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொய்யாப்பழ தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கே.ஜி., வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கொய்யாப்பழத்தினை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் கொய்யாப்பழ தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி மகாலெட்சுமி வரவேற்றுப் பேசினார். தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவர் லிங்கேஷ், முத்துராம், மாணவி பிரதிக்ஷா  ஆகியோர் கொய்யாப்பழத்தின் பயன்கள் மற்றும் அதன் மருத்துவக்குணங்கள் பற்றி பேசினர். கொய்யாப்பழ கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர்.மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் மாணவர் ஜெரிக்சன் நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி சிவதனுஷிகா வரவேற்றுப் பேசினார்.சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து தலைமை யாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் பேசினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் பற்றி பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மாணவர் ஸ்டெர்லைன் புஷ்பராஜ், மாணவி காயத்ரி ஆகியோர் தொகுத்து வழங்கினர். மாணவர் விகாஷ் நன்றி கூறினார்.

< 1 ... 12 13 14 15 16 ... 20 >