இந்திய மருத்துவ ஓமியோபதி சார்பில் நடைபெற்ற யோகா போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர் சுரேந்திர சக்தி வெற்றி பெற்றார்.
தென்காசி ஐ. சி. ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மருத்துவம் ஓமியோபதி துறை சார்பாக நடந்த யோகா போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளும்
பங்கேற்றனர்.
இதில் யோகா போட்டியில் இப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் சுரேந்திர சக்தி வெற்றி பெற்றார்.
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை சார்பில் நடைபெற்ற 6வது சித்த மருத்துவ திருநாள் விழாவில் மாணவர் சுரேந்திர சக்திக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஆகாஷ், எம். பி., தனுஷ்; எம். குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு. கபீர், நகராட்சி தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா ஆகியோர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
வெற்றி பெற்ற மாணவர் சுரேந்திர சக்திக்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான
தி. மிராக்ளின் பால் சுசி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினர்.