News

News

தென்காசியில் ஆக்ஸ்போர்டு பள்ளியில் சுதந்திர தினவிழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி முருகஸ்ரீ வரவேற்றுப் பேசினார். தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் சுடலை மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் சுதந்திர போராட்ட வீரர்கள், நாம் பெற்ற சுதந்திரம், சுதந்திர இந்தியா உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர். தேசப் பற்றை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் சுடலை பரிசு வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாணவி ஆர்னிகா நன்றி கூறினார்.

மாவட்ட மேஜைபந்து போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

மாவட்ட அளவிலான மேஜைபந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான மேஜைபந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிவப்பிரகாசம், அன்டன் ஜெலஸ்டீன் ஆகியோர் இளையோர் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றனர். மேலும் இளையோர் ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவர் சிவப்பிரகாசம் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் வெள்ளையனே வெளியேறு இயக்க தின நிகழ்ச்சி நடந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை மகாத்மா காந்தி நடத்தினார். இந்த இயக்கத்தின் 75வது ஆண்டு தினத்தை முன்னிட்டு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி பாலதீபிகா வரவேற்றுப் பேசினார்.  தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவிகள் கார்த்திகா, விஜயலெட்சுமி மற்றும் தேவ்கார்த்திக்,. விஷாலி, கார்த்திகா, ரேணுகா, பிரின்ஸி ஆகியோர் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி, நேரு, ஜான்சிராணி, சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் பற்றி பேசினர். சுதந்திர போராட்ட வீரர்கள் வேடமணிந்த மாணவர்கள் தலைவர்களின் செயல்பாடுகள் பற்றி பேசினர்.மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிகளை மாணவிகள் கிரண்கொசிகா, சுஷ்மிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவி நிரஞ்சனா ஸ்ரீ நன்றி கூறினார்.

தென்காசி வட்டார எறிபந்து போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

தென்காசி வட்டார அளவிலான எறிபந்து போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. தென்காசி வட்டார அளவிலான எறிபந்து போட்டி கணக்கப்பிள்ளைவலசை ஏ.ஜி.உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் தென்காசி வட்டார பகுதியைச் சேர்ந்த பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான மூத்தோர் பிரிவில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆகாஷ், சூர்யா, ஓம்பிரகாஷ், தளவாய்சுந்தர், முத்துராஜகுரு, அபிமணிஷ், திருமலைக்குமார், தானிஸ்முகமது, விக்னேஷ்குமார், லிமோன், மணிசங்கர், இஜாஸ்ஹமீது, பைசல்பாவா,நியாந்தர், குற்றாலநாதன் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

மாவட்ட சதுரங்கப் போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

நெல்லை மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சேதுசிவராம் ஆண்களுக்கான மூத்தோர் பிரிவில் முதலிடமும், மாணவி அப்சரா பெண்களுக்கான இளையோர் பிரிவில் முதலிடமும் பெற்றனர்.  இவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர் மற்றும் மாணவியை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் கார்கில் வெற்றி தினம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் கார்கில் பகுதியை கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் ஆக்ரமிப்பு செய்தது. இதனை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரில் கார்கில் இந்திய ராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இதனை அடுத்து ஆண்டு தோறும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு கார்கில் வெற்றி தினம் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி ஷருண்யா வரவேற்றுப் பேசினார்.

தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் கார்கில் போர் பற்றி பேசினர். மாணவர்கள் நித்தின், ராகுல், பாலசுப்பிரமணியன், கவின்காட்மியல், ராஜாஹரிஹரசுதன், மாணவிகள் ப்ளஸ்ஸி, முகிலரசி, லெட்சுமி, நித்யஸ்ரீ, திவ்யதர்ஷினி, ஜெனத்துள் பிர்தௌஸ், தீபிகா, புவனேஸ்வரி, திவ்யா, பேச்சிமாதேவி ஆகியோர் கார்கில் வெற்றி என்ற தலைப்பில் பேசினர். கார்கில் நடன நிகழ்ச்சி நடந்தது. கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவி விஷ்ணுப்பிரியா நன்றி கூறினார்.

 

< 1 ... 15 16 17 18 19 20