News

News

குறுவட்ட தடகள போட்டிகள் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாதனை

தென்காசி குறுவட்ட அளவிலான தடகள்

விளையாட்டுப் போட்டிகள் தென்காசி இ. சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இப்போட்டிகளில்

தென்காசி குறுவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து
கொண்டனர்.

இப்போட்டிகளில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கான இளையோர் பிரிவிற்கான போட்டிகளில் இப்பள்ளி மாணவர் முகம்மது உசேன் 200மீ ஓட்டத்தில் முதலிடமும், 100மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், 4க்கு 100மீ தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவர் பிரசன்னா 600 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும்,

மாணவர் நித்திஸ் கிருஷ்ணன் உயரம்
தாண்டுதலில் இரண்டாமிடமும், மாணவர் மதன்ராஜ் குண்டு எறிதலில் இரண்டாமிடமும், வட்டு எறிதலில் மூன்றாமிடமும், மாணவர் சந்தோஷ் 800மீ தடை தாண்டும் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவர் கவீஸ் தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர். மூத்தோர் பிரிவிர் இப்பள்ளி மாணவர் மதீஸ் 1500மீ ஓட்டத்தில் முதலிடமும், 800மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், 400மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவர் ராமசெல்வம் உயரம் தாண்டுதலில் முதலிடமும்,

மாணவர் சுரேஷ் குண்டு எறிதலில் முதலிடமும், மாணவர்கள் அசிம் முஸ்தபா, மதீஸ், ஸ்ரீராம் கோகுல், ராஜ ஹரிஹரசுதன் ஆகியொர் தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றனர்.
மிக மூத்தோர் பிரிவில் மாணவர் பாரத் 1500மீ, 800மீ, 400மீ ஓட்டங்களில் முதலிடமும், மாணவர் வெங்கடேஷ்குமார் உயரம் தாண்டுதலில் இரண்டாமிடமும், மாணவர் சந்தீப் பிஸ்வாஸ் நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும் பெற்றனர்.

மாணவிகளுக்கான இளையோர் பிரிவில் இப்பள்ளி மாணவி மாணிக்க ஸ்ரீ 800மீ, 400மீ, ஓட்டங்களில் முதலிடமும், தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும்,
மாணவி ரியானா மெர்லின் தடைதாண்டும் ஓட்டத்தில் முதலிடமும், தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவி காவியா உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும், தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவி சௌமியா குண்டு எறிதல், வட்டு எறிதலில் இரண்டாமிடமும்,

மாணவி கௌசிகா 400மீ ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவி சிமோனா செஜிகா உயரம் தாண்டதல், தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர்.

மூத்தோர் பிரிவில் இப்பள்ளி மாணவி அமிர்தா 3000மீ ஓட்டத்தில் முதலிடமும், அதே போட்டியில் மாணவி ரீனா வைரஜோதி இரண்டாமிடமும், மாணவி கார்த்திகா நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும், மாணவி கஜ உதயா உயரம் தாண்டுதலில் மூன்றாமிடமும் பெற்றனர்.

மிக மூத்தோர் பிரிவில் மாணவி சித்தரஞ்சனி குண்டு எறிதலில் மூன்றாமிடம் பெற்றார். மாணவிகளுக்கான இளையோர் பிரிவில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மாணிக்க ஸ்ரீ தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

மாணவர்களுக்கான மிக மூத்தோர் பிரிவில் இப்பள்ளி மாணவர் பாரத் தனி நபர் சாம்பின் பட்டம் பெற்றார். முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை

ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் க. சுப்பம்மாள். நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன். உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், பால்மதி, சதீஷ்குமார், ராமர், மணிகண்டன், பாண்டிதுரை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

மாவட்ட சிலம்பம், யோகா, ஸ்கேட்டிங் போட்டிகள்: ஆக்ஸ் போர்டு பள்ளி மாவட்டம்

 

தென்காசி மாவட்ட அளவிலான சிலம்பம், யோகா, ஸ்கேட்டிங் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்பம், யோகா, ஸ்;கோட்டிங் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை

ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 30 பேர்கள் பங்கேற்றனர்.

இப்பள்ளி மாணவ, மாணவிகள் சிலம்பம், யோகா, ஸ்கேட்டிங் ஆகிய போட்டிகளில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றனர். இவர்களுக்கு தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் புதியபாஸ்கர் ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும்,

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு

மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் பாரத்தை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் பாராட்டினார்.

 

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அத்தலட்டிக் அசோசியேசன் சார்பில் 35வது மாநில அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது.  இப்போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிக்கு அசோசியேசன் மாநில தலைவர் வால்டர் தேவாரம், மாநில செயலாளர் லதா ஆகியோர் தலைமை தாங்கினர்.

 

இப்போட்டியில் 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.எஸ்.பாரத் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். இவருக்கு அசோசியேசன் தலைவர் வால்டர் தேவாரம் சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டினார். இம்மாணவர் பாரத் ஆந்திர மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற தேசிய அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

 

சாதனை படைத்த மாணவர் பாரத்தை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, சர்வதேச பயிற்சியாளர் நிகில் சிற்றரசு ஆகியோர் உடனிருந்தனர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் சுதந்திர தின விழா

     தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி முத்து பிருந்தா வரவேற்று பேசினார்.  குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத் தலைவர் சத்யராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.  மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவில் குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி நன்றி கூறினார்.

75 வது பவள விழா சுதந்திர தின விழா

75 வது பவள விழா சுதந்திர தின விழாவில் தென்காசி ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் நடந்த 75 வது பவள விழா சுதந்திர தின விழாவில் மூவர்ண தேசியக்கொடியை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஏற்றிவைத்து காவல்துறை அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நாட்டின் 75வது பவள விழா சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி இ. சி. ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த 75 வது பவள விழா சுதந்திர தின விழாவில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினர், வனத்துறை, ஊர்க்காவல்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டார். இதனைத் தொடர்ந்து சமாதானப் புறாக்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் பறக்க விட்டனர்.

இதனைத் தொடர்ந்து விழாவில் மொத்தம் 210 அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களையும் , 13 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சுதந்திரப் போராட்ட தியாகிகளை கெளவரப்படுத்தி பொன்னாடை போர்த்தினார்.


தென்காசி மாவட்டம் உதயமாகிய பின்னர் 4வது ஆட்சியரான ஆகாஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் நகர் ஊரமைப்பு துறை கூட்டம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நகர் ஊரமைப்பு துறை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், தென்காசி மாவட்ட மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் தாளாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய நகர் ஊரமைப்பு துறை பற்றிய விளக்கக் கூட்டம் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

 கூட்டத்திற்கு எவரெஸ்ட் கல்வி நிறுவனங்களில் நிறுவனர் மற்றும் தலைவரும், தென்காசி மாவட்ட மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் தாளாளர்கள் சங்க தலைவருமான டாக்டர் முகைதீன் அப்துல் காதர் தலைமை தாங்கினார்.  

சங்க சட்ட ஆலோசகரும், ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை வரவேற்று பேசினார்.

தென்காசி மாவட்ட நகர் ஊரமைப்பு இணை இயக்குநர் ப. ரங்கநாதன் பள்ளி கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறையில் அனுமதி பெறுவது குறித்து விளக்கி பேசினார். மேலும் இதுகுறித்து பள்ளிகளின் தாளாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இணை இயக்குநர் பதில் அளித்தார். பொறியாளர் பாலசுப்பிரமணியன் விளக்க உரையாற்றினார்.


கூட்டத்தில் பாரத் கல்வி குழும தாளாளர் வழக்கறிஞர் மோகனகிருஷ்ணன், யுஎஸ்பி கல்வி குழும தலைவர் செல்வராஜ்,  ஆக்ஸ்போர்டு கல்வி குழும தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, எஸ்எம்ஏ கல்வி குழும இயக்குனர் ரா. ராஜ்குமார், ஹில்டன் பள்ளி, அக்பர் பள்ளி, அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீராம் பள்ளி, செயிண்ட். ஜான்ஸ் பள்ளி, ஸ்ரீராம் வித்யாலயா,

செயிண்ட். அசீஸ் பள்ளி, பிரியண்ட் பள்ளி, ஸ்ரீபாரதிகண்ணா பள்ளி, விஸ்டம் பள்ளி, ஜாய் பள்ளி, நியு கேம்பிரிட்ஸ் பள்ளி, நியு கிரஸண்ட் பள்ளி, செவன்த்டே பள்ளி, ஹிந்து நாடார் உறவின் முறை பள்ளி,  செய்யது பள்ளி, சாதனா வித்யாலயா,

இம்மானுவேல் பள்ளி, இமாம் கஸாலி பள்ளி, எம்எஸ்பிபி பாலிடெக்னிக் கல்லூரி, வீரமாமுனிவர் ஆர்சி பள்ளி, செயிண்ட் மேரிஸ் பள்ளி, புலாரி பள்ளி, அல் அசார் பள்ளி, லயன்ஸ் மகாத்மா பள்ளி உட்பட 50க்கும் மேற்பட்ட பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

44வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டிகள் விழிப்புணர்வு

சென்னை மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டிகள் நடைபெறவுள்ளதை யொட்டி

தென்காசி இ. சி. ஈ அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சுய புகைப்பட பதாகையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் சுய புகைப்படம் (செல்பி) எடுத்துக்கொண்டார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உடன் உள்ளார்.

11ம் வகுப்பு தேர்வில் ஆக்ஸ் போர்டு பள்ளி 100 சதவீத தேர்ச்சி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு தேர்வு எழுதிய 92 மாணவ, மாணவிகளும்;; முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

இப்பள்ளி மாணவி ரா. வந்தனா 600க்கு 583 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு: தமிழ்-97, ஆங்கிலம்-93, இயற்பியல்-98, வேதியியல்-97, கணினி அறிவியல்-100, கணிதம்-98.

இப்பள்ளி மாணவி க. ஆதிதெட்சணா 581மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-95, ஆங்கிலம்-95, பொருளியல்-93, வணிகவியல்-99, கணக்கியல்-99, கணினி பயன்பாடு-100.

இப்பள்ளி மாணவி ஜெ. சௌமியாள் ஜெயகனி 570 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மூன்றாமிடமும் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-95, ஆங்கிலம்89, இயற்பியல்-96, வேதியியல்-96, உயிரியல்-100, கணிதம்-94.

இப்பள்ளியில் கணிதத்தில் 3 பேரும், கணினி பயன்பாட்டில் 2 பேரும், கணினி அறிவியலில் ஒருவரும், உயிரியலில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


சாதனை படைத்த மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால் சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் க. சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

< 1 2 3 4 5 6 ... 20 >