தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 101 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவர் இரா. அஜய்குமார் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மற்றும் தென்காசி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.
இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-98, ஆங்கிலம்-95, இயற்பியல்-98, வேதியியல்-100, கணினி அறிவியல்-100, கணிதம்-100.
இப்பள்ளி மாணவி பெ. சுபாஷினி 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-95, ஆங்கிலம்-96, இயற்பியல்-98, வேதியியல்-100, கணினி அறிவியல்-99, கணிதம்-100.
இப்பள்ளி மாணவி சை. லத்திபா இஹ்ஸானா 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மூன்றாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-98, ஆங்கிலம்-94, பொருளியல்-100, வணிகவியல்-100, கணக்கியல்-100, வணிக கணிதம்-95. இப்பள்ளியில் வேதியியலில் 4 பேரும், கணினி அறிவியலில் 3 பேரும், கணிதத்தில் 2 பேரும், கணக்கியலில் 4 பேரும், வணிகவியலில் 3 பேரும், பொருளியலில் ஒருவரும், வணிக கணிதத்தில் 3 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சாதனைபடைத்த மற்றம் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சட்டக்கல்லூரி பேராசிரியர் முனைவர் எம். இ. டி. முகமது, பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால் சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.