தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி ஆகியவை சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி முன்னிலை வகித்தார்.
பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினார்.
விழாவில் பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டக் கல்வி அலுவராக சங்கீதா சின்னராணி நியமிக்கப்பட்டார். இவர் தென்காசி மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு வந்து மாவட்டக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறார் கோவிட் -19 தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக தென்காசி ஹவுசிங்போர்டு காலனியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய அறிவியல் இன்ஸ்பயர் விருதுக்கான போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று அறிவியல் இன்ஸ்பயர் விருது பெற்றனர்.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.