தென்காசி வ. உ. சி. வட்டார நூலகம் நடத்திய மகாத்மாகாந்தி, காமராஜர் பற்றிய கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாண, மாணவிகள் வெற்றி பெற்றனர்.
தென்காசி வ. உ. சி. வட்டார நூலம் சார்பில் மகாத்மாகாந்தி, காமராஜர் பற்றிய மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.
மகாத்மா காந்தி கட்டுரைப் போட்டியில் இப்பள்ளி மாணவி மு. அஷ்வினி பாலா, மகாத்மாகாந்தி பேச்சுப் போட்டியில் இப்பள்ளி மாணவர் ஜெரிக்சன்,
காமராஜர் ஓவியப் போட்டியில் இப்பள்ளி மாணவி விஷ்ணுபிரியா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை,
ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி,
பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.