News

News

மத்திய போலீசாருக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் பணிக்காக தங்கியிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு கொரோனா தடுப்பு வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி. எஸ். சமீரன் உத்தரவின்பேரில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உஷா வழிகாட்டுதலின் பேரில் இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா பிரிவு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தங்கியிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கான கொரோனா தடுப்பு வழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் மத்திய போலீஸ் படை உதவி கமி~னர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆய்வாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.

இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தாபிரிவு மருந்தாளுநர் நூர்ஜகான், வட்டார சுகாதார புள்ளியியலர் ஆனந்த் ஆகியோர் மத்திய போலீசாருக்கு கொரோனா தடுப்பு மருத்துவ ஆலோசனைகளை கூறி அவர்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கினர்.

மேலும் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீண்டதுார ஓட்டப் போட்டி ஆக்ஸ்போர்டு மாணவர் முதலிடம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள, பெரியசாமியாபுரம் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் பள்ளி சார்பில், செம்பியன் நீண்டதுார ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

12 முதல் 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 8 கிலோ மீட்டர் போட்டியில், தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார். இவருக்கு பதக்கம் மற்றும் ரூ.2,000த்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவர் பாரத்தை, ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, செயலாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை க.சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், பயிற்சி அளித்த பால்கன் பவுண்டேசன் செயலாளர் நிகில் சிற்றரசு மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் பாராட்டினர்.

மாவட்ட தடகளப் போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் முதலிடம்

மாவட்ட தடகளப் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார்.

நெல்லை மாவட்ட தடகளச் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் சேரன்மகாதேவி கோப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது..

இப்போட்டியில் தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் 16 வயது ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் தென்காசி குத்துக்கல்வசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம். எஸ். பாரத் முதலிடம் பெற்றார். மேலும் இவர் 300 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றார். இவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவர் பாரத்தை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே. திருமலை, செயலாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையசிரியை க. சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன், பயிற்சி அளித்த பால்கன் அத்லட்டிக் பவுன்டேசன் செயலாளர் நிகிர் சிற்றரசு மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

தேசிய வில்வித்தைப் போட்டிக்கு ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் தேர்வு

தேசிய வில்வித்தைப் போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை சேப்பாக்கத்தில் இந்திய இளைஞர் விளையாட்டுகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு இளைஞர் ஒலிம்பியன் சங்கம் சார்பில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 12 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான வில்வித்தைப் போட்டியில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வேல்முருகன் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார்.

இவருக்கு ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்க மாநில தலைவர் டி. எஸ். ஆர். சுபாஷ்; ஆகியோர் வெற்றி கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்..

இம்மாணவர் தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். வெற்றி பெற்ற மாணவர் வேல்முருகனை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே. திருமலை, கல்வி குழும செயலாளரும் பள்ளி முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

தென்காசி மாவட்ட மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் தாளாளர்கள்; சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு வழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் தாளாளர்கள் சங்கம் சார்பில் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்வி நிறுவனத்தில் வைத்து சாலை பாதுகாப்பு வழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எவரெஸ்ட் கல்வி குழும தாளாளரும், சங்க தலைவருமான டாக்டர் முகைதீன் அப்துல் காதர் தலைமை வகித்தார். யுஎஸ்பி கல்வி குழும தாளாளர் சகாய செல்வமேரி வரவேற்று பேசினார்.

பழையகுற்றாலம் ஹில்டன் கல்வி குழும தாளாளரும் சங்க புரவலருமான ஆர்.ஜெ.வி.பெல் துவக்க உரையாற்றும் போது, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியம் பற்றியும், அது சார்ந்த சட்டங்கள் பற்றியும் விளக்கியதோடு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து வாரந்தோறும் பள்ளி மாணவ, மாணவிகளக்க சிறப்பு வகுப்பு நடத்திட வேண்டும் என்றார்.

தென்காசி எம்கேவிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளரும் சங்க துணைத் தலைவருமான பாலமுருகன் பேசும்போது, பள்ளிகளில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் கல்வி நலனுக்காக சங்க செயல்பாடுகள் இருப்பதை தொடர வேண்டும் என்றார்.

 குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும செயலாளர் டி.அன்பரசி திருமலை சங்க செயல்பாடுகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும், பொதுநலனோடு செயல்படுவதன் அவசியம் பற்றியும் விளக்கினார்.

சங்க சட்ட ஆலோசகர் பேராசிரியர் டாக்டர் முகமது பேசும்போது, சமூகத்தில் நலிவுற்ற மக்களுக்கு குறிப்பாக சட்ட விழிப்புணர்வு குறைவாக உள்ள கிராமப்புற மக்களுக்கு சாலைபாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்குவது குறித்தும் விளக்கம் அளித்தார்.

குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழுமம் மற்றும் சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே.திருமலை பேசும்போது, பள்ளிகள் செயல்பட தேவையான அரசு சான்றிதழ்களை பள்ளி நிர்வாகிகளுக்கு காலதாமதமின்றி கிடைத்திட சங்கம் உறுதுணையாக இருக்கும் என்றும், சாலை விதிமுறைகள் பின்பற்றப்படுவதன் அவசியம் பற்றியும், இதுகுறித்து மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம் பற்றியும் கூறினார்.


வல்லம் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளரும் சங்க பொருளாளருமான காளியப்பன் பேசும்போது, அரசு துறை சார்ந்த பயிற்சி வகுப்புகளுக்கும், பள்ளி பெற்றோர்களுக்கும் இயன்ற அளவிற்கு சங்கம் உதவிட வேண்டும். கல்வி கட்டண சலுகை அனைத்து தாளாளர்களும் வழங்கி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவிகளை உயர்த்திட வேண்டும் என்றார்.

யுஎஸ்பி கல்வி குழும தலைவர் செல்வராஜ் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். கூட்டத்தில் பள்ளி தாளாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ கல்வி குழும தாளாளர் ராஜ்குமார் பேசும்போது, இன்றயை மாணவர்கள் பெற்றோரையும், வயதான முதியோர்களையும் மதிக்க வேண்டும். கைப்பேசி பயன்படுத்தும் நேரத்தை குறைக்க வேண்டும். வரலாற்று தலைவர்களின் நூல்களை அதிகம் வாசிக்க மாணவர்களை வலியுறுத்த வேண்டும் என்று கூறி நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு

 

 

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாதம் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (8ம் தேதி) முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளி சென்று பயில அனுமதிக்கப்பட்டனர்.

இதன்படி தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பெற்றோர் ஒப்புதல் கடிதம் கொண்டு வந்தனர். சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து, வகுப்புக்கு 25 மாணவ, மாணவிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டது.


இதுகுறித்து ஆய்வு செய்ய ஆக்ஸ்போர்டு பள்ளிக்கு வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செண்பகா தலைமையில் மருத்துவ குழுவினர் வந்தனர். அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்தனர்.

சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து வந்த மாணவ, மாணவிகளுக்கு தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளை டாக்டர் செண்பகா வழங்கினார்.


ஆய்வின் போது ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே.திருமலை, தாளாளாரும், முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் வழக்கறிஞர் தி.மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை க.சுப்பம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

மாவட்ட சிலம்ப போட்டியில் ஆக்ஸ்போர்டு மாணவர் முதலிடம்

தென்காசி மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் திருவேல்முருகன் முதலிடம் பெற்றார்.

தென்காசி மாவட்ட சிலம்பாட்டம் அசோசியேசன் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்டம் சாம்பியன்ஷிப் போட்டி இலஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவர் திருவேல்முருகன், சப்-ஜூனியர் பிரிவில் முதலிடம் பெற்றார். இம்மாணவருக்கு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

மாணவரை, போட்டி இயக்குநரும், சிலம்பம் தேசிய நடுவருமான சுந்தர், குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ், தென்காசி மாவட்ட சிலம்பாட்ட கழக மாவட்ட செயலாளர் சேர்மபாண்டி, ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, இயக்குநர் வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரெசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் மாணவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது .

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளி  செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  சமூக இடைவெளியை பின்பற்றி 19ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படலாம் என அரசு கூறியுள்ளது.

தென்காசி குத்துக்கல்வலசை 
ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளை வரவேற்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது . 

வகுப்பறையில் 25 மாணவ, மாணவிகள் மட்டும் அமரக்கூடிய வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டது. காலையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு கையெழுத்து பெறப்பட்டது. மேலும் பெற்றோர்களின் இசைவு கடிதம் பெறப்பட்டது . மாணவ, மாணவிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது .

முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பள்ளி வந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. விதிமுறைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஒட்டப்பட்டிருந்தன. 

வரவேற்பு நிகழ்ச்சியில் ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர்  

வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால் சுசி,  தலைமை ஆசிரியை குழந்தை தெரசா உதவி தலைமையாசிரியை க. சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் கலந்து கொண்டனர்.

< 1 ... 5 6 7 8 9 ... 20 >