News

News

தென்காசி மாவட்ட மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளின்தாளாளர்கள் சங்க துவக்க விழா எஸ்.பி.,சுகுணாசிங் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்ட மெட்ரிக், மெட்ரிக்மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் தாளாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சுகுணாசிங் சங்கத்தினை தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் தாளாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இச்சங்கத்தின் தொடக்க விழா கடையநல்லூர் எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

விழாவிற்கு சங்க புரவலரும் ஹில்டன்மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி தாளாளருமான ஆர்.ஜெ.வி.பெல் தலைமை தாங்கினார்.

சட்டத்துறை பேராசிரியர் டாக்டர் எம்.இ.டி.முகமது, சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே.திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்;. சங்கதலைவரும் எவரெஸ்ட் கல்வி குழும தலைவருமான எஸ்.முகைதீன்அப்துல் காதர் வரவேற்று பேசினார்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சுகுணாசிங் சங்கத்தின் செயல்பாடுகளை தொடங்கி வைத்து பேசியதாவது:

மழைபெய்து ஓடோடிவரும் தண்ணீரை சேமிக்காமல் விட்டு விட்டால் அது கடலில் கலந்து உப்பு தண்ணீராகி வீணாகிவிடும். ஓடும் தண்ணீரை தடுத்து நிறுத்தி அணை கட்டி சேமிக்கும்போது தேவைப்படும் போது தண்ணீரை நாம்குடிநீருக்கும், விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கும் நாம் பயன்படுத்த முடியும்.

மாணவர்களும் தண்ணீரைப் போன்றவர்கள்தான். அவர்களை கட்டுப்படுத்தி அவர்களுக்கு ஒழுக்கம், கல்வி அறிவு புகட்டி அவர்களை நல்வழிப் படுத்தி, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற, பொதுமக்களுக்கு சமூகசேவை செய்ய பள்ளிகள் உதவி செய்து வருகின்றன.

இதனை கருத்தில் கொண்டு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு அனைத்துதரப்பு மாணவர்களின் நலனுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.
இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சுகுணாசிங் பேசினார்.

விழாவில் சங்கத்தின் துணைத்தலைவரும் எம்.கே.வி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளருமான ஜி.பாலமுருகன், துணைச் செயலாளரும் எஸ்எம்ஏ மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி தாளாளருமான ஜி.இராஜசேகரன், பொருளாளரும் ஸ்ரீராம் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி தாளாளருமான எம்.காளியப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும இயக்குநர் வழக்கறிஞர் தி.மிராக்ளின்பால்சுசி தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர்கள் யுஎஸ்பி செல்வராஜ், நியு கிரஸண்ட் செய்யது சுலைமான், ஸ்ரீகோமதிஅம்மாள் ராஜேஸ்கண்ணா, செயிண்ட் ஜோசப் ரோணி, ஸ்ரீகண்ணா சுபாஷ் கண்ணா, அல்அசார் காதர்அலி, விஸ்டம் ஜெய்லாணி, சக்ஸஸ் நாகராஜன், கிங்ஆப் கிங்ஸ் பிரசாந்த்,

எவரெஸ்ட் சேக்முகமது, நேசனல் பப்ளிக் இராஜ்குமார், மவுண்ட் ஹில்டன் டாக்டர் பிராம்டன் ரத்னபெல், ஆக்ஸ்போர்டு பப்ளிக் மிராக்ளின் பால்சுசி, நியு கேம்பிரிட்ஜ் அக்பர்அலி மற்றும் பள்ளி தாளாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் சங்க செயலாளரும் ஆக்ஸ்போர்டு மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி பள்ளி தாளாளருமான தி.அன்பரசி திருமலை நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளிக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கிய அமைச்சர்

நெல்லை: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு தொடர் அங்கீகார ஆணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நெல்லை சங்கர்நகர் ஜெயேந்திரா சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. 

விழாவிற்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்தார். மெட்ரிக் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர் கோபிதாஸ் வரவேற்றுப் பேசினார்.செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கி பேசினார். 

இவ்விழாவில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கான தொடர் அங்கீகார ஆணையை அமைச்சர் செங்கோட்டையனிடம் இருந்து பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை பெற்றுக் கொண்டார்.
 
இவ்விழாவில் தென்காசி எம்.எல்.ஏ.வும், தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, எம்எல்ஏ.,க்கள் முருகையா பாண்டியன், இன்பத்துரை, சண்முகநாதன், ரெட்டியார்பட்டி நாராயணன், தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கருப்புசாமி, தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எஸ்எஸ்எல்சி தேர்வில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாநில சாதனை

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்;சி தேர்வில் 109 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி மாணவர்கள் ஆர்.அஜய்குமார், எஸ்.கிஷோர்குமார் ஆகிய இருவரும் 500 மதிப்பெண்களுக்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடம் பெற்று, மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை படைத்தனர்.

இவர்களில் ஆர்.அஜய்குமார் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-100. எஸ்.கிஷோர்குமார் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-99.

மாணவி ஜெ.ஜெரிஷா சரோன் ரோஸ் 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-99, அறிவியல்-100, சமூகஅறிவியல்-99.

மாணவர் எம்.கௌதம் அரவிந்த் 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மூன்றாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-99.

இப்பள்ளியைச் சேர்ந்த 4 பேர் கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும், 2 பேர் அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண்களும், ஒருவர் சமூக அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றனர். மேலும் 20 பேர் தமிழில் 100க்கு 99 மதிப்பெண்களும். 3 பேர் ஆங்கிலத்தில் 100க்கு 99 மதிப்பெண்களும் பெற்றனர். 495 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேர்களும், 490 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேர்களும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 27 பேர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 66 பேர்களும் பெற்றுள்ளனர். பள்ளியில் சராசரி மதிப்பெண் 437 ஆகும்.

சாதனை படைத்த மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் தி.மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை க.சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டினர்.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாதனை

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 தேர்வில் 100  சதவீத தேர்ச்சி  பெற்றது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தேர்வு எழுதிய 98 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. 

இப்பள்ளி மாணவி எம்.ஷிவாணி 600க்கு 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடம்  பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-95, இயற்பியல்-99, வேதியியல்-99, உயிரியல்-95, கணிதம்-99. இவர் 97.66 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இப்பள்ளி மாணவி எம்.மகாலெட்சுமி 569 மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிம் பெற்றார். இவர் தமிழ்-99, ஆங்கிலம்-90, இயற்பியல்-94, வேதியியல்-95, உயிரியல்-92, கணிதம்-99 என மதிப்பெண்கள் பெற்றார். இவர் 94.83 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 


இப்பள்ளி மாணவர் எம்.சூர்யா 566 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மூன்றாமிடம் பெற்றார். இவர் வணிக கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார். இவர் 94.33 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இப்பள்ளியில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 29 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். பள்ளியில் சராசரி மதிப்பெண்  74.6 சதவீதம் ஆகும்.

சாதனை படைத்த மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் மிராக்ளின் பால் சுசி, நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன், தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை க.சுப்பம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

பிளஸ் 1 தேர்வு : ஆக்ஸ்போர்டு பள்ளி 100 சதவீத தேர்ச்சி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 தேர்வில் 100  சதவீத தேர்ச்சி  பெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தேர்வு எழுதிய 98 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவி ஷிவாணி 600க்கு 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-95, இயற்பியல்-99, வேதியியல்-99, உயிரியல்-95, கணிதம்-99. இவர் 97.66 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இப்பள்ளி மாணவி மகாலெட்சுமி 569 மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிடம் பெற்றார். இவர் தமிழ்-99, ஆங்கிலம்-90, இயற்பியல்-94, வேதியியல்-95, உயிரியல்-92, கணிதம்-99 என மதிப்பெண்கள் பெற்றார். இவர் 94.83 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இப்பள்ளி மாணவர் சூர்யா 566 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மூன்றாமிடம் பெற்றார். இவர் வணிக கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார். இவர் 94.33 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இப்பள்ளியில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 29 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். பள்ளியில் சராசரி மதிப்பெண் 74.6 சதவீதம் ஆகும். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் மிராக்ளின் பால் சுசி, நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன், தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

பிளஸ் 2 தேர்வில் ஆக்ஸ்போர்டு பள்ளி 100 % தேர்ச்சி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 110 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதியதில் அனைவரும் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.இப்பள்ளியில் 600 மதிப்பெண்களுக்கு  572 மதிப்பெண்கள் ஒரு மாணவரும், 560 மதிப்பெண்களுக்கு மேல் இரண்டு மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 28 மாணவ, மாணவிகளும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 70 மாணவ, மாணவிகளும் பெற்றுள்ளனர்.மேலும் கம்யூட்டர்அறிவியல் பாடத்தில் 7 மாணவ, மாணவிகளும், கணக்கியலில் ஒரு மாணவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியின் சராசரி மதிப்பெண்  72 சதவீதம் ஆகும். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், உயர்நீதிமன்ற மதுரைகிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி முதல்வர் அன்பரசிதிருமலை, இயக்குநர் மிராக்ளின் பால் சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாகஅலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

மாவட்ட ஐபிஎல் சதுரங்கப் போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி வெற்றி

தென்காசி மாவட்ட அளவிலான ஐபிஎல் சதுரங்கப் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். தென்காசி மாவட்ட அளவிலான ஐபிஎல் சதுரங்கப் போட்டி கீழப்பாவூரில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். 8 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் இப்பள்ளி மாணவி ஜெஸ்லின் ரோஸ், 9 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் அகஸ்யஸ்ரீ, மகிலேஷ்; சூர்யவேல், 10 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் ஜோஸ் பெனாடிக் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் 11 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் மஞ்சு, பிரியதர்சினி, 12 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் சபரீஸ், ஜெய்சுதர்வேல், 13 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் மகேஷ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களில் சிறப்பு பரிசாக மகேஷ்வரன் ஐபிஎல் சதுரங்க சிகரம் விருதும், சபரீஸ் தங்க பதக்கமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

முதலமைச்சர் கோப்பை இறகுப் பந்து போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி வெற்றி

தென்காசி மாவட்ட முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப் பந்து போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். தென்காசி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப் பந்து போட்டு இலஞ்சி நண்பர்கள் உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 25 வயதிற்குட்பட்ட இறகுப் பந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் நவீன், ரிச்சர்ட் மெர்வின் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. இம்மாணவர்கள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப் பந்து போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

< 1 ... 6 7 8 9 10 ... 20 >