தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி, ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி ஆகியவை சார்பில் நம் நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை வகித்தார். ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகர் தி. மிராக்ளின் பால்சுசி, முன்னிலை வகித்தார்.
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.
பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி பேசினர்.
ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகள் விழாவை கண்டு களி;த்தனர். விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் சமூகஇடை வெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் கலந்து கொண்டனர்.