News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் 2வது தடுப்பூசி முகாம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 15 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த மாதம் நடைபெற்றது. இம்முகாமில் சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு முதலாவது தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு 2வது தடுப்பூசி போடும் முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி ,
வட்டார சுகாதார ஆய்வாளர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அனுசுயா தலைமையில் சகுந்தலாதேவி, சுமதி, பாக்கியலெட்சுமி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்து 2வது கொரோனா தடுப்பூசி போட்டனர்.

<< Go back to the previous page