தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு தேர்வு எழுதிய 92 மாணவ, மாணவிகளும்;; முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.
இப்பள்ளி மாணவி ரா. வந்தனா 600க்கு 583 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு: தமிழ்-97, ஆங்கிலம்-93, இயற்பியல்-98, வேதியியல்-97, கணினி அறிவியல்-100, கணிதம்-98.
இப்பள்ளி மாணவி க. ஆதிதெட்சணா 581மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-95, ஆங்கிலம்-95, பொருளியல்-93, வணிகவியல்-99, கணக்கியல்-99, கணினி பயன்பாடு-100.
இப்பள்ளி மாணவி ஜெ. சௌமியாள் ஜெயகனி 570 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மூன்றாமிடமும் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-95, ஆங்கிலம்89, இயற்பியல்-96, வேதியியல்-96, உயிரியல்-100, கணிதம்-94.
இப்பள்ளியில் கணிதத்தில் 3 பேரும், கணினி பயன்பாட்டில் 2 பேரும், கணினி அறிவியலில் ஒருவரும், உயிரியலில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால் சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் க. சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உட்பட பலர் பாராட்டினர்.