நெல்லை மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சேதுசிவராம் ஆண்களுக்கான மூத்தோர் பிரிவில் முதலிடமும், மாணவி அப்சரா பெண்களுக்கான இளையோர் பிரிவில் முதலிடமும் பெற்றனர். இவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர் மற்றும் மாணவியை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.