தென்காசி வட்டார அளவிலான எறிபந்து போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. தென்காசி வட்டார அளவிலான எறிபந்து போட்டி கணக்கப்பிள்ளைவலசை ஏ.ஜி.உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் தென்காசி வட்டார பகுதியைச் சேர்ந்த பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான மூத்தோர் பிரிவில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆகாஷ், சூர்யா, ஓம்பிரகாஷ், தளவாய்சுந்தர், முத்துராஜகுரு, அபிமணிஷ், திருமலைக்குமார், தானிஸ்முகமது, விக்னேஷ்குமார், லிமோன், மணிசங்கர், இஜாஸ்ஹமீது, பைசல்பாவா,நியாந்தர், குற்றாலநாதன் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.