News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார்.

ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி, பள்ளி நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார்.  

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாறுவேடப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி வினா, விளையாட்டுப் போட்டிகள், பாட்டுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.  

போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் உதவி தலைமையாசிரியை முனைவர் க. சுப்பம்மாள் நன்றி கூறினார்.

<< Go back to the previous page