தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக தென்காசி ஹவுசிங்போர்டு காலனியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான நியமன உத்தரவினை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் வழக்கறிஞர் முருகனிடம் வழங்கினார்.
வழக்கறிஞர் முருகனுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞரும்,
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சட்ட ஆலோசகருமான திருமலை பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் சக வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர் கள், அரசியல் கட்சியினர்,
முக்கிய பிரமுகர்கள் சந்தித்து அரசு வழக்கறிஞர் முருகனுக்கு தெரிவித்தனர்.