News

News

ஆக்ஸ்போர்டு பள்ளிகளில் குடியரசு தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி ஆகியவை சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி முன்னிலை வகித்தார்.

பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினார்.

விழாவில் பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

<< Go back to the previous page