தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். மாணவி நிரல்யாதேவி வரவேற்றார்.
மாணவர்கள் கமலேசன், தன்விக், சாய் விஜய், ரெயான் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
மாணவர்கள் சுகில், ஹர்ஷிகா அபிஷாதேவி, சுபபொன் லெட்சுமி, ரெய்ஃபா ஆகியோர் பள்ளியின் சிறப்பு குறித்து பேசினர்.
தொடர்ந்து மாணவ மாணவிகளின் நடனம் விளையாட்டு போட்டிகள், பெற்றோர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளியின் சட்ட ஆலோசகர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, இயக்குனர் வக்கீல் மிராக்ளின்பால் சுசி ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.
மாணவர் சாய்சக்தி மாறன் நன்றி கூறினார்.