தென்காசி மாவட்ட தடகளப் போட்டிகளில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மதீஷ் சாம்பியன் பட்டம் பெற்று மாநில தடகள போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் பங்களா சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 2000ம் மீட்டர் ஓட்ட போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.மதீஷ் முதலிடம் பெற்றார். மேலும் 800 மீட்டர் ஓட்டத்திலும் இம்மாணவர் முதலிடம் பெற்றார். தடகளப் போட்டிகளில் மாணவர் ஆர்.மதீஷ் சாம்பியன் பட்டம் பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இம்மாணவருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை தென்காசி மாவட்ட தடகள சங்க தலைவர் ஆலடி ஆ.எழில்வாணன், செயலாளரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான ச.செல்லப்பாண்டியன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர் மதீஷை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டினர்.