News

News

தென்காசி மாவட்ட தடகளப் போட்டிகள்: ஆக்ஸ்போர்டு பள்ளி வெற்றி

தென்காசி மாவட்ட அளவிலான தடகளப்

போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.

தென்காசி மாவட்ட அளவிலான தடகளப்

போட்டிகள் தென்காசி ஐ. சி. ஐ. அரசு ஆண்கள்

மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் பங்கேற்ற தென்காசி

குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் 400 மீ, 800 மீ, 1500மீ ஓட்டங்களில்

முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

இம்மாணவர் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

ஆண்கள் மூத்தோர் பிரிவு போட்டிகளில் இப்பள்ளி மாணவர் மதீஸ் 800 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும்,
1500 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவர் சுரேஷ் குண்டு எறிதலில் மூன்றாமிடமும் பெற்றனர்.

ஆண்கள் இளையோர் பிரிவு போட்டிகளில்

இப்பள்ளி மாணவர் முகம்மது உவேஷ் 200 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், பிரசன்னா 600 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், மதன்ராஜ் குண்டு எறிதலில் மூன்றாமிடமும் பெற்றனர்.

பெண்கள் இளையோர் பிரிவில் இப்பள்ளி மாணவி மாணிக்கஸ்ரீ 200 மீ ஓட்டத்தில் முதலிடமும், 400 மீ, 600 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றார். இம்மாணவி பெண்கள் இளையோர் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் முதன் இரண்டு இடங்கள் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான தடகளப் போட்டிகளுக்கு தகு பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை

ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை,

பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான மிராக்ளின் பால்சுசி,

பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், பால்மதி, ராமர், மணிகண்டன், பாண்டித்துரை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பெற்றோர்கள் பாராட்டினர்.

<< Go back to the previous page