News

News

மாநில டேக்வாண்டோ போட்டிக்கு ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் கள் தேர்வு

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு

மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்

தேர்வு செய்யப்பட்டனர்.

தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான

டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டி தென்காசி ஐ. சி. ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இளையோர் பிரிவில் நித்திஷ் கிருஷ்ணன் முதலிடமும், அம்மார் ரஹீம் மூன்றாமிடமும், மூத்தோர் பிரிவில் விஷ்ணுராஜ் முதலிடமும்,

பால அபிசேக்குமார் மூன்றாமிடமும், மிக மூத்தோர் பிரிவில் ஆதிசிவ சாய்ராம், முப்புடாதி, சுப்பிரமணியன், பிறை முத்துக்குமார், சாகுல்கமீது, ஹரீஸ் ஆகியோர் முதலிடமும், முகமது இம்ரான் மூன்றாமிடமும் பெற்றனர்.

மூத்தோர் பிரிவில் இப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் ரீனா வைரஜோதி, சலெட்ஸ்னோபியா, ராஜலெட்சுமி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

இவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான 
கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான 
தி. மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன்,

உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், பால்மதி, ராமர், மணிகண்டன், பாண்டிதுரை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

<< Go back to the previous page