தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி. மிராக்ளின் பால் சுசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி தனியார் பள்ளிகள்) ஏ. ராமசுப்பு மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினார்.
மாணவி காஸிரா வரவேற்று பேசினார். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையா சிரியை முனைவர் சுப்பம்மாள் மற்றும் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் சுதந்திர போராட்டம் குறித்தும், குடியரசின் சிறப்புகள் குறித்தும் பேசினர்.
நடனம், சிலம்பம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளை மாணவ, மாணவிகள் நடத்தினர்.
நிகழ்ச்சிகளை மாணவர் சஞ்சய் தொகுத்து வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
முடிவில் மாணவி சிவ தனிக்ஷிதா நன்றி கூறினார்.