தென்காசி அருகேயுள்ள இ. விலக்கு ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பென்னாக்கிள் கணிதப் பதக்கத் தேர்வு 2023 நடைபெற்றது.
இத்தேர்வில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இத்தேர்வில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கிறிஸ்டினா ஜெனி இரண்டாமிடம் பெற்றார். இவருக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் ரூ. 3 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவி கிறிஸ்டினா ஜெனியை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி. மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.