News

News

மாநில தடகளப் போட்டி ஆக்ஸ் போர்டு பள்ளி மாணவர் முதலிடம்

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தகடளப் போட்டிகளில் 800 மீ ஓட்டத்தில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார்.

சென்னை தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 4வது தமிழ்நாடு மாநில இளைஞர் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் 800 மீ ஓட்டத்தில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார். அவருக்கு முதல் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர் பாரத் கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற தேசிய இளைஞர் தடகளப் போட்டிகளில் பங்கேற்ற தகுதி பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவர் பாரத்தை பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி. மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
 

<< Go back to the previous page