மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான இந்தியன் ஸ்பீடு ஸ்டார் 2017-18 தடகளப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இதில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சிவப்பிரகாசம், முகம்மது மீரான் ஆகியோர் 200 மீ ஓட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் வழக்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.