பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற உலகத் திறனாய்வுத் திட்ட தடகளப் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். பாவூர்சத்திரம் சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி கல்வி மாவட்ட அளவிலான 2017-18 உலகத் திறனாய்வுத் திட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் தென்காசி கல்வி மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்; சிவப்பிரகாசம், முகம்மது மீரான் ஆகியோர் 200 மீ ஓட்டத்தில் முதலிடமும், மாணவர் பாரத் 400 மீ ஓட்டத்தில் முதலிடமும், வெங்கடேஷ்குமார் 100 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர் நவீன்வேலாயுதம், மாணவி காசிம்சுல்தானா ஆகியோர் 100 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர். மேலும் மாணவி ஸ்ருதிகா குண்டு எறிதலில் முதலிடமும், மாணவர் ஆகாஷ் மூன்றாமிடமும், மாணவர் ஹரிவெங்கடேஸ் உயரம் தாண்டுதலில் மூன்றாமிடமும் பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்கள் மண்டல அளவிலான தடகளப் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.