தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சப்போட்டா பழ தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கே.ஜி.வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பல்வேறு பழங்களின் பயன்களை அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு பழத்தின் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சப்போட்டா பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக சப்போட்டா பழ தின விழா கொண்டா டப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி சுபலெட்சுமி வரவேற்றுப் பேசினார்.சப்போட்டா பழ கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர். சப்போட்டா பழத்தின் குணாதிசயங்கள் மற்றும் அவற்றை உண்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் மாணவர் இசைடேனியல் நன்றி கூறினார்.