கீழப்பாவூரில் நடைபெற்ற ஐபிஎல் செஸ் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வெற்றி பெற்றார். நெல்லை மாவட்டம் கீழப்பாவூரில் ஐபிஎல் செஸ் அகாடமி சார்பில் ஐபிஎல் செஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மஞ்சு இரண்டாமிடம் பெற்றார். இவருக்கு நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரிசு வழங்கி பாராட்டினார்.வெற்றி பெற்ற மாணவி மஞ்சுவை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.