தென்காசி கல்வி மாவட்ட தடகளப் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. பங்களாச்சுரண்டை பேரன்புரூக் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகம்மது மீரான் ஜூனியர் பிரிவு 100 மீ ஓட்டம் மற்றும் 200 மீ ஓட்டத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும், மாணவர் வெங்கடேஷ்குமார் உயரம் தாண்டுதலில் முதலிடமும், 100 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர்கள் முகம்மது மீரான், வெங்கடேஷ்குமார், நவீன்வேலாயுதம், பரத் ஆகியோர் 4க்கு100 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றனர். மாணவர் சீனியர் பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் லியான், அழகுசூர்யா, சிவபிரகாசம், சிவசுப்பிரமணியன் ஆகியோர் 4க்கு100 மீ தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், சூப்பர் சீனியர் பிரிவில் இப்பள்ளி மாணவர் வேணுகோபால் குண்டு எறிதலில் இரண்டாமிடமும் பெற்றனர்.மாணவிகள் ஜூனியர் பிரிவில் இப்பள்ளி மாணவி சுருதிகா குண்டு எறிதலில் முதலிடமும், சூப்பர் சீனியர் பிரிவில் அபிஷா 100 மீ ஓட்டம் மற்றும் மும்முறை தாண்டுதலில் முதலிடமும், 100 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றனர். மாணவர் ஜூனியார் பிரிவில் இப்பள்ளி மாணவர் முகம்மது மீரான் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும், மாணவிகள் சூப்பர் சீனியர் பிரிவில் இப்பள்ளி மாணவி அபிஷா தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜபாண்டி, பால்மதி, செல்வம், வெங்கடேஷ்குமார் மற்றும் பெற்றோர்கள் உட்டப பலர் பாராட்டினர்.