News

News

தென்காசி குறுவட்ட இறகு பந்து போட்டிகள் : ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

தென்காசி குறுவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. தென்காசி குறுவட்ட அளவிலான இறகு பந்து போட்டி தென்காசி பி.எஸ்.எஸ்.உள் விளையாட்டு அங்கில் நடைபெற்றது. போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சூப்பர் சீனியர் மாணவர் ஒற்றையர் பிரிவில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் நவீன் முதலிடமும், இரட்டையர் பிரிபில் இப்பள்ளி மாணவர்கள் நவீன், ரிச்சர்ட் மெர்வின் ஆகியோர் முதலிடமும் பெற்றனர். ஜூனியர் மாணவியர் ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவி ரியானா மெர்வின் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற இம்மூவரும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற் கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, இசக்கிதுரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினார்கள்.

<< Go back to the previous page