News

News

தென்காசி வட்ட மேஜைபந்து போட்டிகள் : ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

தென்காசி குறுவட்ட மேஜைபந்து விளையாட்டு போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. தென்காசி குறுவட்ட அளவிலான மேஜைபந்து விளையாட்டு போட்டி தென்காசி பி.எஸ்.எஸ்.ஜெகநாத் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜூனியர் மற்றும் சீனியர் மேஜைபந்து போட்டியில்  ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றனர்.மாணவிகள் ஒற்றையர் போட்டியில் ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவிலும் இரட்டையர் போட்டியில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவிலும் இப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான மேஜைபந்து விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராஜம்மாள் மற்றும் பலர் பாராட்டினர்.

<< Go back to the previous page