News

News

தென் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் : ஆக்ஸ்போர்டு பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன்

தென்காசியில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் தென்மாவட்ட அளவில் பள்ளி மாணவ. மாணவிகளுக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் ஆக்ஸ்போர்டுமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. தென்காசி ஸ்ரீநல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளுக்கு ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் முருகன், ஸ்ரீநல்லமணி வித்யாலயா சார்பில் ரவி, போட்டி ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜ், கிங்ரைசர் நிறுவனர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் குங்பூ ராம்ராஜ் வரவேற்று பேசினார். போட்டிகளை கடையநல்லூர் இண்டர்நேசனல் பள்ளியின் தாளாளர் முகம்மது ஹபீப் துவக்கி வைத்தார்.போட்டியில் ஒட்டுமொத்த குழுநபர் போட்டியில் ஸ்டெப்டூமெண்டில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், ரேசில் தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியும் பெற்று சாதனை படைத்தது. சாம்பியன் முதலிடத்தை பணகுடி செண்டஆண்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், இரண்டாம் இடத்தை கடையநல்லூர் சக்ஸஸ் பள்ளியும், மூன்றாம் இடத்தை மதுரை நேசனல் ஸ்கேட்டிங் அகாடமி மற்றும் கொடிக்குறிச்சி யு.எஸ்.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தென்காசி ஸ்ரீராம்நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களின் சேர்மன் மணிமாறன் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.  மாவட்ட கல்வியாளர் மாரிமுத்துசாமி, பள்ளியின் முதல்வர் மாரிமுத்து, பயிற்சியாளர்கள் காமராஜ், சரவணன், முத்துரத்தினம், ரமாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சியாளர் பெரியதுரை நன்றி கூறினார். ஓட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

<< Go back to the previous page