News

News

தென்காசி வட்ட பூப்பந்தாட்டப் போட்டிகள் : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிகள் முதலிடம்

தென்காசி குறு வட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். தென்காசி குறுவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த அணியினர்  கலந்து கொண்டனர்.  இப்போட்டியில் கலந்து கொண்ட குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியைச் சேர்ந்த மாணவிகள் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்றனர். இம்மாணவிகள் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ்,  பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

<< Go back to the previous page