News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் ஆசிரியர் தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவிற்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் விநாயகம் வரவேற்றுப் பேசினார். மாணவிகள் சுபிக்ஷா, முத்துலாவண்யா, நிகிதா ஆகியோர் ஆசிரியர் தின சிறப்புகள் குறித்து பேசினர்.  ஆசிரியர் சிவகுமரன், ஆசிரியைகள் சகாயராணி, ஜான்டயானா, ராஜாத்தி, ஆனந்த ஜோதி, லூர்து அமுதா, பெல்லா, மாரியம்மாள், ஆரோக்கியமேரி, அபிநயா, சவுமியா, பிளாரன்ஸ் மற்றும் பலர் ஆசிரியர் தின கலை நிகழ்ச்சி நடத்தினர். ஆசிரியர்களின் பணி அறப்பணி என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. ஆசிரிய, ஆசிரியைகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஆசிரியை திவ்யா தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியை பவித்ரா நன்றி கூறினார்.

<< Go back to the previous page