News

News

தென்காசி வட்ட கோ-கோ போட்டிகள் : ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

தென்காசி வட்ட அளவிலான கோ-கோ போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. தென்காசி குறுவட்ட அளவிலான கோ-கோ போட்டி இலத்தூர் கதிர்காந்தம் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கார்த்திகேயன், லியான், அனுசன், பாலாஜி, பாஸ்கர், புவனேஷ்வர், புவனேஷ், ஐரிஸ் ஜபர்சன், ஜோஸ், பரணி, சுதர்சன், ஜான் லியோன், சபரி பாலசுந்தர் ஆகியோர் சூப்பர் சீனியர் பிரிவு கோ-கோ போட்டியில் முதலிடம் பெற்றனர். இவர்கள் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

<< Go back to the previous page