மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாநில சதுரங்க போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பாளையங்கோட்டை செயிண்ட் இக்னேசியஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சேதுசிவராம் மிக மூத்தோர் பிரிவில் இரண்டாமிடமும், இப்பள்ளி மாணவி மகாலெட்சுமி மிக மூத்தோர் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனர். இவ்விருவரும் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாநில சதுரங்கப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் சேது சிவராம், மாணவி மகாலெட்சுமி ஆகியோரை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.