மாநில இறகுப் பந்து போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ரியான மெர்லின் தேர்வு செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டி மேலப்பாளையம் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பைலட் இறகுப் பந்து உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ரியானமெர்லின் ஜூனியர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்று மாநில அளவிலான இறகுப் பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவியை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.