மாநில தடகளப் போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்ட வருவாய் அளவிலான தடகளப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் மாணவர்களுக்கான சீனியர் பிரிவு 3000 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்று மாநில தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும் இப்பள்ளி மாணவி அபிஷா சூப்பர் சீனியர் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில்; வெற்றி பெற்று மாநில தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற மாணவர் பாரத் மற்றும் மாணவி அபிஷாவை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும், முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.