News

News

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் வெற்றி

கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெற்றி பெற்றார். கோயம்புத்தூர் துப்பாக்கி சுடும் மைதானத்தில் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் அமைப்பு சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.  இப்போட்டியில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் உதய இசக்கி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெற்றி பெற்றார். இவர் தென்னிந்திய அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற மாணவர் உதய இசக்கியை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

<< Go back to the previous page