News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் குடியரசு தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்சி) பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை முன்னிலை வகித்தார். மாணவி மகாலெட்சுமி வரவேற்று பேசினார். கல்வி குழும இயக்குநர் வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஆசிரியைகளுக்கு பாராட்டு சான்று அளிக்கப்பட்டது. விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி காவ்யா நன்றி கூறினார்.

<< Go back to the previous page