News

News

முதலமைச்சர் கோப்பை இறகுப் பந்து போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி வெற்றி

தென்காசி மாவட்ட முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப் பந்து போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். தென்காசி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப் பந்து போட்டு இலஞ்சி நண்பர்கள் உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 25 வயதிற்குட்பட்ட இறகுப் பந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் நவீன், ரிச்சர்ட் மெர்வின் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. இம்மாணவர்கள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப் பந்து போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

<< Go back to the previous page