News

News

மாவட்ட ஐபிஎல் சதுரங்கப் போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி வெற்றி

தென்காசி மாவட்ட அளவிலான ஐபிஎல் சதுரங்கப் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். தென்காசி மாவட்ட அளவிலான ஐபிஎல் சதுரங்கப் போட்டி கீழப்பாவூரில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். 8 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் இப்பள்ளி மாணவி ஜெஸ்லின் ரோஸ், 9 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் அகஸ்யஸ்ரீ, மகிலேஷ்; சூர்யவேல், 10 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் ஜோஸ் பெனாடிக் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் 11 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் மஞ்சு, பிரியதர்சினி, 12 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் சபரீஸ், ஜெய்சுதர்வேல், 13 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் மகேஷ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களில் சிறப்பு பரிசாக மகேஷ்வரன் ஐபிஎல் சதுரங்க சிகரம் விருதும், சபரீஸ் தங்க பதக்கமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

<< Go back to the previous page